×

மன்னார்குடியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்த வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம நபர்கள் துணிகரம்

மன்னார்குடி, ஏப்.25:  ன்னார்குடியில் காற்றுக்காக வீட்டை திறந்து வைத்து படுத்திருந்தபோது மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து 5 பவுன் நகைகளை திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டை கீழத்தெருவில் வசிப்பவர் அறிவழகன் (49). விவசாயி. இவரது மனைவி சுஜாதா. இவர்கள் வீட்டில் பசுமாடு  நேற்றுமுன்தினம் இரவு கன்று ஈன்றது. அப்போது அருகிலிருந்து மாடு, கன்றினை கவனித்த சுஜாதா பின்னர் மாடியில் வசிக்கும் தனது வீட்டிற்கு சென்று காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு படுத்து தூங்கினார். அவரது கணவன் அறிவழகன் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று விட்டார். நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த அறிவழகன் களைப்பால் வீட்டினுள் சென்று படுத்து விட்டார்.

அப்போது கதவு திறந்து கிடந்ததை பார்த்த மர்மநபர்கள் வீட்டில் புகுந்து பீரோவை திறந்து 2 பவுன் செயின், ஒருபவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம் என 4 பவுன் நகைகளை திருடிக்கொண்டு வெளியில் வரும்போது வாசலில் படுத்திருந்த சுஜாதாவின் கழுத்தில் கிடந்த தாலிசெயினை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு விழித்த சுஜாதா திருடர்கள் செயினை பறிப்பதை பார்த்ததும் ஒரு கையில் தாலி செயினை பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். அப்போது இரண்டு பவுன் செயினில் தங்களிடம் சிக்கியது. மொத்தம் 5 பவுன் நகைகளுடன் மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அறிவழகன் மன்னார்குடி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப்பிரிவு எஸ்ஐ கேசவமூர்த்தி ஆகியோர் சென்று பார்வையிட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mansion ,persons ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்